Monday, April 27, 2009

காதலி

என் காதலிக்கு

ஆயிரம் வாசனைகள்
என்னை கடந்து சென்றாலும்
முதன் முதலாய் என்
முகத்தில் உரசிய
உன் கூந்தல் வாசம் --- மறக்க முடியவில்லை.

இயேசு பிரான்
தோள் சிலுவை போல
இறங்காமல்
என் இதயத்தில் உன்
நினைவுகள் ----- மறக்க முடியவில்லை

அறுசுவை உணவு
புசித்த போதும்
அன்றொருநாள்
நீ ஊட்டிய
தயிர் சாதம் சுவை -------------- மறக்க முடியவில்லை.

பொழுதுகள் பல
காலத்தால் கடந்து
வந்த பின்னும்
முதல் முத்தம் பெற்ற
மார்கழி மாத
மாலை பொழுது ------------மறக்க முடியவில்லை.

ராகங்கள் தாளங்கள்
பாடல்கள் பல மாற்றி
கேட்ட போதும்
என் இதயத்தில் நீ பாடிய
இஸ்தாரின் பாடல் ----- மறக்க முடியவில்லை.

உன் விழிகளால்
காற்றில் கோலமிட்டு
என் பார்வைக்கு அனுப்பினாய்.
நான் பொய்யாய்
புறக்கணிக்க
நிஜமாய் உன் கோபம்
என்னால்
அதை --------------- மறக்க முடியவில்லை.

என் வீட்டு சமயலறையில்
உரிமையாய் நுழைந்து
ரகசியமாய்
எனக்கு போட்டு
குடுத்த காப்பி
நான் பாதி நீ மீதி
குடித்தது---------- மறக்கமுடியவில்லை

யாருமில்லா
ஓர் மாலை பொழுதில்
நானே பறித்து , கட்டி உனக்கு
வைத்து விட்ட
மல்லிகை சரம் ------- மறக்க முடியவில்லை.

என் புகைப்பட ஆல்பத்தில்
நான் மட்டுமே இருந்த
என் தனி புகைப்படங்கள்
திடீரென திருடு போய்
உன் ஜாக்கெட்டுக்குள்
தஞ்சம் புகுந்தது --------மறக்க முடியவில்லை.


நான் முத்தம் கேட்டு
நீ கொடுக்காமல்
பின்னொருநாள்
தனிமையில்
என் உதட்டு சிகெரெட்டை
பிடுங்கி எறிந்து
கோபத்துடன் நீ கொடுத்த
அந்த அழுத்தமான முத்தம் -------மறக்க முடியவில்லை.



நான் காய்ச்சலால்
படுத்த போது
நீயும் சாப்பிடாமல்
வெறும் பிரட் சாப்பிட்டு
பின் உனக்கும் காய்ச்சல் வந்து
என்னிடம்
திட்டு வாங்கினாயே -------------- மறக்க முடியவில்லை.

நான்கு வருடம் கழித்து
நான் ஊருக்கு வந்த போது
ஓர் ஓரமாய் நின்று
பார்வையால் நலம் விசாரித்து
பறக்கும் முத்தம் கொடுத்தாயே ------ மறக்க முடியவில்லை.

முதன் முதலாய்
நான் உனக்கு புடவை
வாங்கி கொடுத்து
ரகசியமாய்
நீ அதை எனக்கு மட்டும்
உடுத்தி காட்டினாயே ---- மறக்க முடியவில்லை.

எல்லா பண்டிகையின்
போதும் யாருக்கும்
தெரியாமல்
உன் கையால் எனக்கு
சர்க்கரை பொங்கல்
ஊட்டி விடுவாயே --- மறக்க முடியவில்லை.

நண்பர்களுடன் சேர்ந்து
தண்ணி போட்டு வந்து
உன் கையால் முதுகில் அடி
வாங்கியது --மறக்க முடியவில்லை.

என் வீட்டில் எல்லோரும்
வெளியூர் போய் விட
நீ சமைத்து
பெரிய கேரியரில்
எடுத்து வந்து
தூக்கம் கலைத்து
ஊட்டி விட்டாயே ---மறக்க முடியவில்லை.

என் கவிதைகளை
படித்து விட்டு
எவளுக்காக எழுதினாய்
என்று என் கன்னம்
திருகிவிட்டு
அதை எடுத்து சென்று
தினமும் படித்து முத்தமிட்டாயே ----- மறக்க முடியவில்லை.

நீ எனக்காய் நிறைய செய்வாய்.
நானும் கூட .
இருந்தாலும்
எனக்காய் நீயும்
உனக்காய் நானும்
சண்டை போட்டு
கொள்வோமே
அங்கு தான் நம் காதல்
அவ்வப்போது
நிறைவு பெற்று கொள்கிறது.

No comments:

Post a Comment