Saturday, April 28, 2012

நீ என்ற என் தேவதை...






கோபம் வரும்போது எதையாவது
எடுத்து எறியும் என்னால்
எப்போதுமே எறிய முடிவதில்லை,
என் மனதில் உள்ள
உன் நினைவுகளையும்,
தேவதை உன் உருவத்தையும்!

தேநீரில் சர்க்கரை இட
மறந்ததற்கு வருத்தம்
கொள்கிறாய்
ஏன்?
நீ ஒரு வாய் குடித்து விட்டு
 
கொடுத்தால்
போதாதா?


சாயம் இல்லாமலேயே
சிவந்த
உன் உதடுகள்
இன்னும் சிவப்பாகின்றன,
நீ திருட்டுத் தனமாய்
என்னைப் பார்த்து புன்னகை
சிந்தும் போது!

நம் காதல் மலரில்
சிறிது காமத்தின் கள்;
காற்று உன் மாராப்பை
விலக்கியது!!!
----- ராவண பிரபு
 

No comments:

Post a Comment